Monday, 2 February 2015

ஆகாயத் தாமரை - மாலா கஸ்தூரிரங்கன்

ஹாய் friends,

பொங்கல் வாழ்த்துகள் தோழமைகளே .

வந்துட்டேன் மாலா கதையோட 
ஆகாயத் தாமரை - மாலா கஸ்தூரிரங்கன் 

நம் லேடி பாலசந்தர் .........மாலாவோட சிறப்பே திரைக்கதை .....இதிலும் நிறைய இடங்கள் ரசிக்க முடியுது.

ஸ்ரீகாந்தன் ,ஸ்ரீவத்சன் ,ஸ்ரீனி என மூன்று சிங்ககளின் பெற்றோர் மாதங்கி ,ரவிச்சந்திரன் .........இவர்களின் ஏதோ தவறால் மணவாழ்வு தோற்றுப் போய் ,அவர்கள் மேல் உள்ள கோவத்தில் யாரிடமும் பேசாது இறுக்கமாக இருக்கும் ஸ்ரீவத்சன் ........தம்பியிடம் மட்டும் கொஞ்சம் இணக்கம் உண்டு.......மீண்டும் திருமணம் செய்ய வலியுறுத்த ..........அவனோ மறுத்து வரும் நிலையில் ,

ஸ்ரீனி தன் தோழி செந்தாமரைக்கு உதவி செய்யும் பொருட்டே மருத்துவனாக லட்சியம் கொள்கிறான்.அவன் குஷ்பூ வை காதலிப்பதை வத்சவ் ட்ட சொல்கிறான்.

செந்தாமரை சின்னசாமியின் இரண்டாவது மனைவியின் மகள் .......அதனால் தன் பெரியன்னையின் (கங்கை ) கொடுமைக்கு ஆளாகிறாள் ......மேலும் பெரியன்னையின் மருமகன் கண்ணும் அவள் மேல் விழ ...........அதற்கு ஏற்ப செந்தாமரை அக்கா பூவரசியும் இரண்டாவது பிரசவத்தில் இறக்கிறாள் ........இரு குழந்தைகளும் பெண்ணாக போக இதை சாக்கு வைத்தே ,அவளை மணமுடிக்க ஊர் பஞ்சாயத்தை கூட்டு கிறான் .......அறியும் ஸ்ரீனி அதை தடுக்க தான் மணமுடிக்க எண்ண ...........தம்பியின் காதல் அறிந்த ஸ்ரீவத்சன் தானே தாலி கட்டி விடுகிறான்.

அதிரிச்சியில் ,அவளை ஏற்க முடியாமல் திண்டாடும் ஸ்ரீவத்சன்,கணவனையே முதலாளியாக எண்ணும் செந்தாமரை ,இவர்களை இணைக்க மாதங்கியும் ,ஸ்ரீனியும் கூட்டு ......வைக்க ......
லேடி பாலசந்தர் மாலாவின் கலக்கல் திரைக்கதை காரணமாக ..........கதை சும்மா அதிருது .........
செந்தாமரையின் அறியாமை,அவள் தமிழும் ..........சிரிப்பு என்றால் ,
அவள் ஏக்கமும்,சகிப்புத்தன்மை,உணர்வுகள் மிகவும் மனதை வருத்துகிறது ........

பூவரசி மூத்த மகள் திரிஷா ,இளையவள் தந்தை ,மற்றும் கங்கையால் ஒதுக்கப்பட்ட சின்னு வுக்கு தாயாக இருக்கும் அவள்,ஸ்ரீவத்சன் ஒதுக்கம் கண்டு வருந்தி .........ஒதுங்குவதும்,என நம் அனுதாபத்தை அள்ளி செல்கிறாள் .

ஸ்ரீனி ,மாதங்கியின் திட்டப்படி ஸ்ரீவத்சன் தன் மனைவியுடன் சேர்வதும்,அந்த குழந்தைகளை ஏற்பதும் கவிதைபோல அழகாக சொல்லி இருக்காங்க.

நம் தேசியமலர்  சோடை போகுமா ?

தமிழர் திருநாளில் நல்ல கதை தந்த மாலாக்கு ஒரு hats off 

No comments: