Friday, 21 November 2014

என்றும் மகிழ்வுடன் - புகழ் பெற்று வரும் பிரேமாவின் பத்தாவது நாவல்.

என்றும் மகிழ்வுடன் - புகழ் பெற்று வரும் பிரேமாவின் பத்தாவது நாவல்.

கதாநாயகன் - வினய்
கதாநாயகி - ஹரிணி.


ரேணுகா கணவரை இழந்து ,வினய் ,மனோஜ் எனும் மக்களை தனித்தே வளர்த்தவர்.வினய் தம்பியையும் ,அன்னையும் தன் வாழ்வாய் கொண்டவன்.அவர்களைப் பிரிய மன்மில்லாமல் IIT படிப்பை தூக்கி எறிந்தவன்.இன்று தன் உழைப்பில் ஒரு புது அப்பார்ட்மெண்ட் ல் வீடு வாங்கி அன்னையை குடியேற்றியவன் .வேலை விஷயாமாக இந்த முறை மட்டுமே போவேன் என்று சிங்கப்பூர் செல்லும் அவன் அங்கே ஹரிணியின் காதலில் விழ்கிறான்.
சிங்கப்பூர் செல்லும்போது தவறாக பெண்ணிடம் நடந்ததாக கூட்டம் கூட்டி அவமான படுத்துகிறார் பாண்டியன்.அவரை தன் வாழ் நாளில் சந்திக்கவே கூடாது ன்னு சவால் விட்டு செல்கிறான் .அவர் ஹரிணியின் அத்தையின் கணவர் ,தான் பிளாட் க்கு அருகில் இருக்கிறார் என்று அறிகிறான்.காதலும் ,அவமானமும் போட்டி போட இறுதியில் காதல் வெல்கிறது .

கல்யாணத்துக்கு பின்னும் அவருடன் மோதல் தொடர்கிறது.அவர் வீட்டிக்கு போகாமல் ,ஹரிணி போவதையும் தடுக்கிறான்.அது தம்பதியர் இடையே பிணக்காகி முட்டல்கள் ,காதல் என்று போகிறது.

மனோஜ்,வினய் புரிதல் கதையின் பிளஸ்.அண்ணனை அடிக்கும் அம்மாவிடமே பேசமால் இருக்கும் அளவு அவன் பாசம் சூப்பர்.அத்துடன் இசை ஞானம் கொண்ட அவன் ,புகழ்பெற்ற பாட்டு போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு பெறுகிறான் .அதில் வரும் தடங்கல்களை தாண்ட அறிவுரை சொல்லும் அண்ணியை அம்மா என்று கூப்பிட்டு ........wow......what a writing ?



பாண்டியனின் மனைவி அபிராமி ,ஹரிணி தன் மாமியாரை ரேனும்மா ன்னு சொல்லும்போது ,தன்னை அம்மா என்று அழைக்க யாருமில்லை என்று வருந்த ,மனோஜ் அவரை அம்மா என்று அழைக்கிறான்.அதை கண்டும் மகிழும் ரேணுகா...

மனோஜ் குறும்பும்,மலரிடம் செய்யும் வம்பும்,அண்ணி,அம்மா விடம் தன் அண்ணனுக்காக பேசும் இடமும் சூப்பர்.விழாவில் தன் அண்ணனை அப்பா என்று அழைப்பது ...........சூப்பர்.

மனோஜ் ஜின் காதலி பிளஸ் அவர்கள் சிறுவயது தோழி மலர் .
டாக்டர் அவளும் அக்குடும்பத்தில் ஒருவராகவே வளருகிறாள்.
நட்பு,காதல்,பாசம் குறும்பு என்று ஒன்றையும் விடல பிரேமா .ட்விஸ்ட் களின் ராணி ட்விஸ்ட் யும் விடல ,ஆனால் பாதியில் நமக்கு தெரிந்து விடுது..


எல்லோருக்கும் நல்லதே நினைக்கும் வினய் ஏன் பாண்டியன் மேல் மட்டும் கோவம் ?,அவரை மன்னித்து சமாதானமாவானா .........என்று அறிய படியுங்கள் பிரேமா கதை.


பிரேமா முடியல ,ஐயோ எதைச்சொல்ல ,எதைவிட...........
சூப்பர் டுப்பர் கதை.நன்றி.


No comments: