காமராஜர்.
அன்னை சிவகாமியின் அருமை புதல்வனே!
தமிழ் அன்னையின் தவப்புதல்வனே!
விருதையில் பிறந்து வீரனாய் வளர்ந்து
சரித்திரம் படைத்த நாயகனே!
எளிமையின் இருப்பிடமே!
ஏழைப் பங்காளனே!
ஏற்றமிகு சிந்தனையின் சிகரமே!
ஆடுமேய்ப்பவனும்,மாடுமேயப்பவனு ம்
நாடாள எண்ணி,பள்ளிகள் பலகட்டி
கல்விக் கண்திறந்த ரத்தினமே!
மதிய உணவுத் திட்டத்தின் மன்னவரே!
சீருடை தந்த செம்மலே!
சீருடை தந்த செம்மலே!
அணைகள் பல கட்டி உழவர்களுக்கு
அமுதூட்டிய அண்ணலே!
சட்டங்கள் கற்றதில்லை,
பட்டங்கள் பெற்றதில்லை,
திட்டங்கள் பலகோடி
தந்திட்ட அறிவுபெட்டகமே!
வரலாற்றின் வைர மகுடமே!
குமாரசாமியின் குலவிளக்கே!
கறுப்புக் காந்தியே!
ஆடம்பரமில்லா முதல்வரே!
தமிழக பொற்கால ஆட்சியின் மன்னவரே!
உன்றன் பிறந்தநாள்
என்றைக்கும் பொன்நாள்!
விண்ணும்,மண்ணும் உள்ளவரை
காமராஜர் புகழ் என்றும்
வளரும் ! மலரும் ! மணக்கும் !
நன்றி!
No comments:
Post a Comment