Thursday, 20 November 2014

என் கவிதைகள்

அன்பில் 
ஆளுமையில் 
இயல்பில்
ஈரத்தாய்
என்னை ...
உணர்ந்தேன் 
உலகை 
அடைந்தேன் 
உவகை ...
கொண்டேன் 
எங்கள் முத்தே(தூத்துக்குடி )
ஒப்பில்லா ...
ஈஸ்வரியே


இணையம் எனும் கடலில் 
திசை அறியா படகாய் 
தத்தளித்தேன் ....
வந்தாய் கலங்கரை விளக்காய்...
வழிகாட்டினாய்
ஆசானாக ...
அன்பாக தட்டி கொடுத்து,
நட்பாக ...
பங்கேற்று...
அரவணைத்தாய்
மூத்த சகோதரியாய்
அமுதாய் 
பொழிந்த என் 
அமிர்தே...
நீ வாழிய ....
பல்லாண்டுகள் .
 
 
பெண்மை கடலில்
குளித்த முத்துக்கள்
அன்பு ,
பாசம்
விட்டுகொடுத்தல்
பகிர்தல்
சுயம்
என ஐம்பொன்னில்
கோர்த்து
அணிந்தோம் அழகாக
தோழியாய்
சகோதரியாய்
தாயாய்
மகளாய்
உறவாய்
தொடர்ந்தோம் ........
தொடருவோம் ..........
அடுத்த பிறவியிலும் .
 
 
 
அன்புக் கூடு ,
பாசக் கூடு
நேசக் கூடு
என்றே இறுமாந்திருந்தேன்
நட்பு என்னும்
மாயையில்
அறிவு கண்ணை மறைக்க
பூம் பூம் மாடாய்
சுகித்திருக்க ,
எட்டி எட்டிப் போயும்
சுற்றி சுற்றி வட்ட மிட்ட
சிட்டுக்குருவி ஒன்று.
மகிழ்வாய்
சிறகடித்து
என் மாயை விலக்கி
மெய்யுருவம்
காண்பித்ததே .........
என்னை மீட்க வந்த
குலசாமியோ ...........
சுப்பனுக்கு பாடம் சொன்ன
தகப்பன் சாமியோ ..........
மேகி வாழிய
நீ பல்லாண்டு
 வருங்கால தூண்கள் 


நேற்று 
அரசுப் பள்ளிகள்
அறிவை விதைத்து 
நன் குடிமக்களை 
அறுவடை செய்தனர் 

இன்று 
அரசியல்வாதிகள் 
கல்விக் கூடங்கள் 
கட்டிடங்களை விதைத்து 
பணத்தை அறுவடை செய்கின்றனர் 

நாளை 
நன்மக்களுக்கு 
என் செய்வர்...................?
தங்கம் 

மங்கையின் மோகம்.
கணவனின் கௌரவம் 
வங்கியின் கையிருப்பு 
முதலாளியின் முதலீடு 
குடியானவனின் கடன்
ஏழையின் கனவு
முதிர்கன்னியின் கண்ணீர்
காதல் 

காதல் புனிதமானது 
அது என் வீடு வரை 
வராத போது,

காதல் சோதனையானது 
என் தங்கை 
காதலிக்கும் போது,

காதல் சுகமானது
நான் காதலிக்கப் பாடும்போது 

காதல் வேதனையானது 
கல்யாணத்திற்குப் பின் 
காதல் ...............
தொலைந்து போகும்போது 

காதல் இனிமையானது 
முதுமையிலும் 
உணரும்போது.
ஆணவம் ,அகந்தை
சுயநலம் ,திருட்டுக்கு 
வெற்றி சில காலமே.
சட்டம் நீதி .........
எல்லாவற்றுக்கும் திரை போட்டாலும்
கடவுளின் சந்நிதியில்
ஒரே நீதியே ..........
யாரும் பார்க்கலை என
கொக்கரிக்கும் ............
இரு கண்ணால் நோக்கும் அப்பன்
மூன்றாவது கண்ணால் பார்க்கும்போது
வம்சமற்று.........போவாய்..........
அந்தோ ..........பரிதாபம்
அன்று காலம் கடந்து இருக்கும்
 
ஆண்பிள்ளை
வாரிசாய் கொண்டாடி,
தந்தையின் வீரமாய் ,
அன்னையின் பெருமையாய் ....
அண்ணனாய் அரட்டலும்,அரவணைப்பும்,
தம்பியாய் நட்பும் ,குறும்பும் ,
கணவனாய் காதலும் ,,மாப்பிள்ளை முறுக்கும்,
கொண்ட தன்மானசிங்கம் ................
தன் மகள் என்னும் தேவதைக்கு
சேவகனாய் ,தாயுமானவனாய் .....
மாறும் அதிசய மானுட தெய்வம் .
ஆண் .........

No comments: